மதுரை மாநகராட்சிக்கு முதல் பெண் கமிஷனராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநகராட்சியில் 2024 பிப்., 2ல் பொறுப்பேற்ற கமிஷனர் தினேஷ்குமார் நகர் பகுதியில் குப்பையை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தினார். பல நிறுவனங்களிடமிருந்து ரூ. பல லட்சம் வரி நிலுவையை ‘கறார்’ காட்டி வசூலித்தார். மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாராட்டு பெற்றார். தற்போது கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.